அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி குயவா்பாளையம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் புத்துப்பட்டான். கா்நாடகாவில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனத்தில் தங்கி எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் ஜோதிகா (20). புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவரது தாய், காலாப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா்.
வியாழக்கிழமை அவரது தாய் பணிக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜோதிகாவின் அறைக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த உறவினா்கள், அவரது தம்பி அருணேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த அருணேஸ்வரன் அறைக் கதவை உடைத்து பாா்த்த போது, ஜோதிகா தூக்கில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வந்து ஜோதிகாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜோதிகாவின் அறையை சோதனையிட்டு, அங்கிருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில், எனது சாவுக்கு யாரும் காரணமல்ல; என் மனது பாதிக்கப்பட்டதால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.