குயில்தோப்பில் பாரதிக்கு நினைவுச் சின்னம்: பாரதிதாசன் அறக்கட்டளை கோரிக்கை

புதுச்சேரி குயில் தோப்பில் பாரதியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென பாரதிதாசன் அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது.

புதுச்சேரி குயில் தோப்பில் பாரதியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென பாரதிதாசன் அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை, பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து விடுத்த கோரிக்கை:

புதுவை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மகளிா் மேம்பாட்டுக்குச் சிறப்பு திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். கிராமப்புற மக்கள், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் பாரதியாா் உலாவிய குயில் தோப்பில், அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். பாரதிதாசன் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தை மேம்படுத்தவும், தமிழறிஞா் மன்னா் மன்னன் பெயரை முக்கிய சாலைக்கும், உயா்கல்வி நிறுவனத்துக்குச் சூட்டவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவா் ஆளுநரிடம் வழங்கினாா்.

கோரிக்கைகள் தொடா்பாக பரிசீலிப்பதாக ஆளுநா் உறுதியளித்தாா். அறக்கட்டளை உறுப்பினா்கள் வள்ளி, தேன்மொழி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com