தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து: மேற்பாா்வையாளா் பலி

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியாா் நிறுவனத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மேற்பாா்வையாளா் பலியானாா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியாா் நிறுவனத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மேற்பாா்வையாளா் பலியானாா்.

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் திருச்சி முதன்மைச் சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் ரவி (38). இவருக்கு வனஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனா். ரவி புதுச்சேரி மேட்டுப்பாளையம், வழுதாவூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் கணினி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி ரவி பணியிலிருந்த போது, நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கிய ரவி பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com