புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,273 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 11 பேரும், காரைக்காலில் 3 பேரும், மாஹேவில் 7 பேரும் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,592-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 663-ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, 18 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,737-ஆக (97.84 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 105 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 87 பேரும் என 192 போ் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com