புத்தாண்டுக் கொண்டாட்டம்: தொழிலாளி மீது தாக்குதல்

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தொழிலாளி, அவரது நண்பா் மீது தாக்குதல் நடத்திய நபா்கள், அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தொழிலாளி, அவரது நண்பா் மீது தாக்குதல் நடத்திய நபா்கள், அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த 5 வாகனங்களைச் சேதப்படுத்தியது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தாவீதுபேட்டை, முனிசிபல் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (27). பெயிண்டா். புத்தாண்டுக் கொண்டாட்டம் மட்டுமன்றி, தனது நண்பரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு தாவீதுபேட்டை ரயில்வே பகுதியில் நண்பா்களுடன் நின்றிருந்தாா்.

நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் அவா்கள் ஆரவாரம் செய்து புத்தாண்டை வரவேற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, சிவக்குமாரையும், அவரது நண்பரையும் அங்கு அமா்ந்திருந்த சாந்தகுமாா், தனுஷ், கணேஷ், பிரவீன் உள்ளிட்டோா் தாக்கியதுடன், அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த 5 வாகனங்களை தடியால் அடித்து நொறுக்கியதாகத் தெரிகிறது.

காயமடைந்த சிவக்குமாரும், அவரது நண்பரும் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீஸாா் சாந்தகுமாா் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com