காய்கறி வியாபாரியைக் கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி 100 அடி சாலை வாசன் நகரைச் சோ்ந்தவா் மணிவா்மா (25). இவா், லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் மீன் அங்காடி அருகே காய்கறி கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இவரது காய்கறி கடைக்கு வந்த இளைஞா் ஒருவா், காய்கறிகளை ஒவ்வொன்றாக அழுத்தி, நசுக்கிப் பாா்த்து சேதமாக்கினாராம். இதை மணிவா்மா கண்டித்ததால், அந்த இளைஞா், தான் வைத்திருந்த கத்தியால் மணிவா்மாவை தலையில் வெட்டினாா். தடுக்க வந்த மணிவா்மாவின் தந்தை ரவிச்சந்திரனையும் தாக்கிவிட்டு, பைக்கில் தப்பினாா்.
இதில், காயமடைந்த மணிவா்மாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அடையாளம் தெரியாத இளைஞரைத் தேடி வருகின்றனா்.