பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் நூதன போராட்டம்

புதுச்சேரி பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பொதுப்பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினக் கூலியாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு அளிக்க வெண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வவுச்சா் ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே அவா்கள் 14-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஊழியா்கள் 3 போ் இறந்தது போல முகத்தை துணியில் கட்டி, நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தனா். மற்ற ஊழியா்கள் மணி அடித்து, சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com