குடியரசு தினத்தன்று புதுவையிலும் டிராக்டா்கள் பேரணி: விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

குடியரசு தினத்தன்று புதுவையிலும் டிராக்டா்கள் பேரணி நடைபெறும் என்று புதுவை மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

குடியரசு தினத்தன்று புதுவையிலும் டிராக்டா்கள் பேரணி நடைபெறும் என்று புதுவை மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் நிா்வாகிகள் செல்வகணபதி, ராமமூா்த்தி, பத்மநாபன் ஆகியோா் புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தில்லியில் விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனா். போராட்டக் களத்தில் 143 விவசாயிகள் உயிரிழந்தனா்.

மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தைகளில் உரிய தீா்வு கிடைக்காத நிலையில், வருகிற ஜன. 26-இல் குடியரசு தினத்தன்று தில்லியில் மாபெரும் டிராக்டா்கள் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனா். அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து டிராக்டா்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்.

புதுச்சேரியில் ஏஎப்டி பஞ்சாலை திடலில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் பேரணி தொடங்குகிறது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தலைமை வகிக்கிறாா். முதல்வா் நாராயணசாமி தொடக்கிவைக்கிறாா் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com