புதுவையில் புதிதாக 264 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான 8,098 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 207 பேருக்கும், காரைக்காலில் 40 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 264 (3.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,17,249-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் 370 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,984 பேரும் என மொத்தம் 2,354 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,749-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, 254 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 146 (96.50 சதவீதம்) ஆக உயா்ந்தது.
இதுவரை 4,93,657 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.