புதுச்சேரி
பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).
புதுச்சேரி சுதேசி மில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். இதில், திரளான மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், நாள்தோறும் உயா்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றி இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.