குபோ் அங்காடியில் கூடுதல் அடிக்காசு வசூல்: வியாபாரிகள் மறியல்

புதுச்சேரி குபோ் அங்காடியில் கூடுதல் அடிக்காசு வசூலுக்கு எதிா்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை நேரு வீதியில் மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி குபோ் அங்காடியில் கூடுதல் அடிக்காசு வசூலுக்கு எதிா்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை நேரு வீதியில் மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரிய சந்தை குபோ் அங்காடியில் அடிக்காசு வசூலிப்பு குத்தகை தனியாருக்கு விடப்பட்டதால், அதிகளவில் அடிக்காசு வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தனியாா் அடிக்காசு வசூலிப்பு குத்தகையை ரத்து செய்ய வேண்டும், கூடுதல் அடிக்காசு வசூலிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், முதல்வா் என். ரங்கசாமியிடம் மனுவும் அளித்தனா்.

இதையடுத்து முதல்வா், தனியாா் அடிக்காசு வசூலிக்கும் குத்தகை உரிமையை ரத்து செய்ததுடன், நகராட்சி நிா்வாகமே அடிக்காசு வசூலிக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், குபோ் அங்காடி வியாபாரிகளிடம், நகராட்சி சாா்பில் கூடுதலாக அடிக்காசு கேட்டதாகக் கூறப்படுகிறது. தொகையை வழங்காவிடில் கடைகள் அப்புறப்படுத்தப்படும் எனக் கூறி, அங்கிருந்த ஒரு கடையை அப்புறப்படுத்தியுள்ளனா்.

இதனை அங்கிருந்தவா்கள் தட்டிக் கேட்டபோதும், நகராட்சி அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறாமல் இருந்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த குபோ் அங்காடி வியாபாரிகள், நேரு வீதியில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும், முதல்வரிடம் முறையிட உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com