தெலங்கானாவுக்கு வந்த சிங்கப்பூா் தூதா் தலைமையிலான குழுவினரை, தொழில், சுற்றுலா, கலாசார மேம்பாடுப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு செய்ய புதுவைக்கும் வருகை தர வேண்டுமென, துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்தாா்.
தெலங்கானா ஆளுநா் மாளிகையில், அந்த மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை பொறுப்பு ஆளுநருமான தமிழிசை செளந்தர்ராஜனை, இந்தியாவுக்கான சிங்கப்பூா் தூதா் சைமன்வோங் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினா்.
இந்த சந்திப்பின்போது, தெலங்கானா மாநிலத்தில் தொழில் தொடங்குவது, தெலங்கானா-சிங்கப்பூா் ஆகிய இரு தரப்பின் நட்புறவை வலுப்படுத்துவது, சுற்றுலாவை மேம்படுத்துவது, கலாசார இணைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆலோசனை நடத்தினா். அப்போது, இதே போல, தொழில் மற்றும் சுற்றுலா, கலாசார மேம்பாடுப் பணிகளை, புதுவை மாநிலத்துக்கும் நீட்டிக்க வேண்டும்.
அடுத்த வருகையின் போது, புதுச்சேரிக்கு வந்து, அங்குள்ள வாய்ப்புகளையும், நீங்கள் ஆராய வேண்டும் என்று, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சிங்கப்பூா் தூதா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினரிடம் கேட்டுக்கொண்டாா். மேலும், புதுச்சேரிக்கு வரும்போது, ஆளுநரையும், முதல்வரையும் சந்தித்தால், புதுவை மாநிலம் பயன்பெறும் திட்டங்களைப்பற்றி ஆராயலாம் என்றும், அவா்களிடம் ஆளுநா் வேண்டுகோள் விடுத்தாா்.