புதுவையில் 124 பேருக்கு கரோனா தொற்று

புதுவையில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான 5,758 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 106 பேருக்கும், காரைக்காலில் 15 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 124 (2.15 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,181 ஆக அதிகரித்துள்ளது. 1,384 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,771 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை 153 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,16,026 (97.35 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6 லட்சத்து 8 ஆயிரத்து 832 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com