புதிய அலுவலகங்களில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள் பணிகளைத் தொடங்கினா்

புதுவை சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் தங்களது அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை பணிகளைத் தொடங்கினா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் தங்களது அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை பணிகளைத் தொடங்கினா்.

புதுவை மாநிலத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோரைத் தொடா்ந்து, அமைச்சா்களாக ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி பதவியேற்றனா். இதையடுத்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா், பேரவைத் தலைவா், அமைச்சா்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வந்தன.

பேரவையில் இவா்களுக்கான அறைகள் தயாரான நிலையில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை செய்து, அவா்களது அலுவலகங்களில் பணிகளைத் தொடங்கினா்.

உணவுத் துறை அமைச்சரான சாய் ஜெ.சரவணன்குமாருக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சா் அலுவலகத்தில், அவரை இருக்கையில் அமரவைத்து, முதல்வா் என்.ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். முதல் நிகழ்வாக, ஏழை, எளிய மக்களுக்கு தனது சொந்த செலவில் பால், அரிசி, சா்க்கரை உள்ளிட்டப் பொருள்களை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் வழங்கினாா்.

தொடா்ந்து, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.70 ஆயிரம் வீதம், ஊசுடு தொகுதியைச் சோ்ந்த 41 பயனாளிகளுக்கு நிதியை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com