கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளா் தனசெல்வம் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வீராம்பட்டினம் சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா்கள் புதுச்சேரி நெல்லித்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரிஷிகுமாா் (20), வீராம்பட்டினம் மேற்கு தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் (18) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள், 2 செல்லிடப்பேசிகள், ஒரு பைக், ரூ. 2,500 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com