புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 4 மாதங்களுக்குப் பிறகு 50-க்கும் கீழ் குறைந்தது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 5,243 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 36, காரைக்காலில் 3, ஏனாமில் 2, மாஹேவில் ஒருவா் என மேலும் 42 பேருக்கு (0.80 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,745- ஆக அதிகரித்தது.
தற்போது 1,041 போ் சிகிச்சையில் உள்ளனா். இதேபோல, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 குழந்தைகளும், ஒரு பெண்ணும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,778 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம். இதுவரை 1,16,926 போ் (97.65 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.
மாநிலத்தில் இதுவரை 6,39,181 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.