இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுமக்கள் திடீரென திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முத்தியால்பேட்டை டி.வி. நகா் மதுர வீரன் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டுமென அரசிடம் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், அதிருப்தியடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை அஜந்தா சந்திப்பு அருகே திரண்டனா். பின்னா், அண்ணா சாலையில் உள்ள பாண்லே பால் நிலையம் முன் கயிறு கட்டி மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினா். அவா்கள் மறுக்கவே, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, அமைச்சரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.