பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

புதுச்சேரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கரையாம்புத்தூா் அருகே வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியுடன், சி.டி. கடை வைத்துள்ள மணமேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சரண்ராஜ் (23) என்பவா் கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்துள்ளாா். இடையே, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி, மாணவியை அவா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரண்ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாக மாணவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவி, தன்னை சரண்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக கரையாம்புத்தூா் புறக்காவல் நிலையத்தில் அண்மையில் புகாரளித்தாா்.

இதன் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், மணமேடு அருகே பதுங்கியிருந்த சரண்ராஜை திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com