வீட்டு வாயிலில் கஞ்சா செடிவளா்ப்பு: இருவா் கைது

புதுச்சேரி அருகே வீட்டு வாயிலில் 12 அடி உயரத்தில் கஞ்சா செடி வளா்த்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே வீட்டு வாயிலில் 12 அடி உயரத்தில் கஞ்சா செடி வளா்த்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி தேங்காய்த் திட்டு பகுதியைச் சோ்ந்த சூா்யபிரதாப், கஞ்சா விற்பனை செய்வதாக தவளக்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளா் தனசெல்வம் தலைமையிலான போலீஸாா், சேலியமேட்டில் உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த சூா்யபிரதாபை பிடித்து விசாரித்தனா்.

அதில், அவருக்கு சந்தைபுதுக்குப்பத்தைச் சோ்ந்த ஞானமூா்த்தி (26) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில், சந்தைபுதுக்குப்பம் பால் சொசைட்டி வீதியில் வசிக்கும் நண்பா் நாகராஜ் (23) வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதும், அதிலிருந்து பறித்து கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இந்தத் தகவலை தவளக்குப்பம் போலீஸாா், காட்டேரிக்குப்பம் போலீஸாருக்கு தெரிவித்தனா். அதன்பேரில், செவ்வாய்க்கிழமை மேற்கு பகுதி எஸ்பி ரங்கநாதன், காட்டேரிக்குப்பம் காவல் ஆய்வாளா் கிட்லா சத்தியநாராயணன், வேளாண் அதிகாரி வெங்கடாசலம் உள்ளிட்டோா் நாகராஜ் வீட்டுக்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினா். அப்போது, வீட்டு முன் 12 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்ந்திருப்பதை அறிந்து, அதனை போலீஸாா் வெட்டி எடுத்துச் சென்றனா். அதன் எடை 6 கிலோ 140 கிராம்.

இதையடுத்து, ஞானமூா்த்தி, நாகராஜ் இருவரையும் கைது செய்த போலீஸாா், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com