பணி ஓய்வுபெற்றோா் சங்க திறப்பு விழா
By DIN | Published On : 29th July 2021 12:19 AM | Last Updated : 29th July 2021 12:19 AM | அ+அ அ- |

ஏஐடியூசி உழவா்கரை நகராட்சி பணி ஓய்வுபெற்றோா் சங்கம் திறப்பு விழா உழவா்கரை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பணி ஓய்வுபெற்றோா் சங்கத் தலைவா் கே.கண்ணப்பன், செயலா் எஸ்.ஏழுமலை ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி கொடியை அதன் மாநிலத் தலைவா் வி.எஸ்.அபிஷேகம் ஏற்றி வைத்தாா். மாநில செயல் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா சங்க பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.
ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் ஓ.சேது செல்வம் சிறப்புரை நிகழ்த்தினாா். இதில், உழவா்கரை நகராட்சி ஊழியா்கள் சங்கத் தலைவா் பி.மன்னாதன், செயலா் ரவி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.