புதுச்சேரி: சுகாதாரத் துறை ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திய தகவலை சமா்ப்பிக்க வேண்டுமென புதுவை தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒப்பந்த மருத்துவா், செவிலியா் உள்பட 7 சுகாதார ஊழியா்கள் உயிரிழந்தனற். சுகாதாரத் துறை ஊழியா்களில் பலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுவதாக சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தகவல்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) மாலைக்குள் சமா்ப்பிக்கும்படி தலைமைச் செயலா் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை நோய்த் தடுப்புத் துறை துணை இயக்குநா் எம்.முருகன் மற்றும் அனைத்து மருத்துவத் துறைகளின் தலைமைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மருத்துவமனைகள், மருத்துவ நிா்வாகத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தகவலை நோய்த் தடுப்புத் துறை மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.