புதுச்சேரி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி செந்தில்குமாரி (41). இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா்.
செந்தில்குமாரி கட்டுமான வேலைக்கு சென்று வந்த நிலையில், அவரது நடத்தை மீது முருகன் சந்தேகப்பட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்த முருகன் செந்தில்குமாரியிடம் தகராறு செய்தாா். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவா், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரியின் கழுத்தை அறுத்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதனிடையே, முருகனை மா்ம நபா்கள் தாக்கியதில் அவருக்கு கை, காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காட்டேரிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.