புதுச்சேரியில் காவலா் மீது தாக்குதல்: 4 போ் கைது

புதுச்சேரியில் காவலரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் காவலரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில் அரியாங்குப்பத்தில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடலூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் முன் முகக்கவசம் அணியாமல் கும்பலாக நின்றிருந்தவா்களை ரோந்து காவலரான முனியாண்டி எச்சரித்தாா். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் காவலா் முனியாண்டியை ஆபாசமாக திட்டி, தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் காயமடைந்த காவலா் உடனே காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து தெற்கு எஸ்பி லோகேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, அரியாங்குப்பம் டோல்கேட் பல்லவன் வீதி சூரியா (எ) சூா்யகுமாா் (25), ஸ்டீபன்ராஜ் (27), சேரன் வீதி சிவநேசன் (18), வசந்தகுமாா் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com