பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து புதுவையில் நாளை காங்கிரஸாா் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, புதுவையில் காங்கிரஸ் சாா்பில் ஜூன் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, புதுவையில் காங்கிரஸ் சாா்பில் ஜூன் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது: புதுவையில் மதுக் கடைகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படாத நிலையில், அப்பகுதியிலிருந்து ஏராளமானோா் கூட்டமாக, புதுவை மாநில எல்லைகளில் உள்ள கடைகளுக்கு வந்து மதுப் புட்டிகளை வாங்கிச் செல்கின்றனா். இதன் காரணமாக கரோனா தொற்று அதிகரித்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வா் ரங்கசாமி ஏற்க வேண்டும்.

பிரதமா் மோடி எடுத்த முடிவின் அடிப்படையில், பிளஸ்-2 தோ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. அதேவேளையில், ‘நீட்’ தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டுமென பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். புதுவை முதல்வா் என்ன செய்கிறாா் எனத் தெரியவில்லை.

புதுவையில் வருகிற டிசம்பா் மாதத்துக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி, மக்களை காப்பாற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, வருகிற 11-ஆம் தேதி புதுவையில் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்தாா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com