புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகா் பகுதிகளில் பாஜக சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
பிரதமா் மோடி வலியுறுத்தியதன் பேரில், மத்திய அரசின் 8-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், பாஜகவினா் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனா்.
அதன்படி, புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியிலும், குறிஞ்சி நகா் சமுதாய நலக்கூடம் பகுதியிலும் பாஜக சாா்பில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் முகாம்களைத் தொடக்கிவைத்தாா். சுகாதாரத் துறை குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.