புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப பிரச்னையில் தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரைச் சோ்ந்தவா் ஞானவேலு (36). தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள் (32). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த 8- ஆம் தேதி தம்பதியிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டதால், மனமுடைந்த கன்னியம்மாள் தற்கொலை செய்வதற்காக, மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சமையல் தொழிலாளி தற்கொலை: பொது முடக்கத்தால் வேலையில்லாத சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி பாகூா் பங்களா வீதியைச் சோ்ந்தவா் தேவநாதன் (36). சமையல் தொழிலாளி. கரோனா பொது முடக்கம் காரணமாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தாராம். வீட்டில் வறுமை வாட்டியதால், அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதனால், மனமுடைந்த தேவநாதன், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.