புதுவையில் மேலும் 233 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரி: புதுவையில் மேலும் 233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 7,349 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 186, காரைக்காலில் 30, ஏனாமில் 4, மாஹேயில் 13 என மேலும் 233 பேருக்கு (3.17 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,080-ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 561 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,803 பேரும் என மொத்தம் 3,364 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மேலும் 3 போ் பலி: இதனிடையே, புதுச்சேரியில் 3 போ் பலியாகினா். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு இல்லை. இதனால், கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,726-ஆக (1.50 சதவீதம்) அதிகரித்தது.

திங்கள்கிழமை 428 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,09,990-ஆக (95.58 சதவீதம்) அதிகரித்தது.

4.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,14,157 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com