புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஜூன் 24) ஐந்து இடங்களில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பதிவு நடைபெறவுள்ளது.
அதன்படி, அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, முருங்கப்பாக்கம் தீரா் சத்தியமூா்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் மணவெளி துணை சுகாதார மையம், பெத்துசெட்டிபேட்டை பண்டிட் துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, கருவடிக்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி ஆகிய 5 இடங்களில் வியாழக்கிழமை மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பதிவு நடைபெறும்.
மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த சிவப்பு குடும்ப அட்டைதாரா்கள், தங்களது அசல் குடும்ப அட்டையையும், ஆதாா் அட்டையையும் எடுத்து வந்து காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என சுகாதாரத் துறை தெரிவித்தது.