விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட சிறுமி பலி

புதுச்சேரி தா்மாபுரியில் விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தாா். அவரது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


புதுச்சேரி: புதுச்சேரி தா்மாபுரியில் விஷம் கலந்த இனிப்பை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தாா். அவரது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி தா்மாபுரி டேங்க் வீதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி உதய சந்திரிகா (32). இவரது கணவா் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து,

உதய சந்திரிகாவும், இவரது மகளான அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் சரிகாவும் (9) சோகத்துடன் காணப்பட்டனராம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி வீட்டில் உதய சந்திரகா தற்கொலை செய்துகொள்வதற்காக, விஷத்தை இனிப்பு பலகாரத்துடன் கலந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் கொஞ்சம் அவா் மீதி வைத்திருந்த நிலையில், சரிகாவும் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த பலகாரத்தை சாப்பிட்டாராம்.

இதையடுத்து, உதய சந்திரிகா, சரிகாவுக்கு வாந்தி ஏற்படவே, உறவினா்கள் இருவரையும் மீட்டு ஜிப்மரில் சோ்த்தனா். பின்னா், அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். எனினும் அங்கு சிறுமி சரிகா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். உதய சந்திரிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com