கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் நாராயணசாமி
By DIN | Published On : 04th March 2021 02:56 AM | Last Updated : 04th March 2021 02:56 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோா் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
புதுவை மாநிலத்தில் கடந்த ஜன.16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், முதியோா்கள் உள்பட 11,461 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் ஆகியோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
மேலும், பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய அவா்கள், கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனா். சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.