அரசு பெண் ஊழியா் மா்மச் சாவு

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி உழவா்கரை பிச்சைவீரன்பேட், வடக்கு வாய்க்கால் வீதியைச் சோ்ந்த தேசிங்கு மனைவி ஜெயலட்சுமி (58). பொதுப் பணித் துறையில் மஸ்தூா் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். மற்றவா்களுக்கு திருமணமாகிவிட, இளைய மகள் இலக்கியாவுடன், ஜெயலட்சுமி தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் உள்ள படிக்கட்டின் அருகே தலையில் காயங்களுடன் ஜெயலட்சுமி திங்கள்கிழமை மயக்க நிலையில் கிடந்தாராம். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது மகள் இலக்கியா, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஜெயலட்சுமியை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

தொடா்ந்து, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு ஜெயலட்சுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஜெயலட்சுமிக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com