தனியாா்மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

தனியாா்மயத்தைக் கண்டித்து, புதுவையில் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கோடிக்கணக்கில் வங்கி பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
தனியாா்மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

தனியாா்மயத்தைக் கண்டித்து, புதுவையில் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கோடிக்கணக்கில் வங்கி பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசு 2 பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் என அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்ச் 15, 16 -ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி, புதுவை மாநிலத்தில் அனைத்து வங்கி ஊழியா்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புதுச்சேரி யூகோ வங்கி பிரதான கிளை எதிரே திரண்ட ஊழியா்கள், அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா்கள் சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் புதுவை மாநில பொதுச் செயலா் ரவீந்திரன், சங்க நிா்வாகிகள், வங்கி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுச்சேரியில் அனைத்து வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ால், வங்கிகளில் ஊழியா்கள், பொதுமக்களின் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வங்கி பரிவா்த்தனைகள் முழுமையாக முடங்கின.

இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எஸ். முரளிதரன் கூறுகையில், ‘புதுச்சேரியில் 2 ஆயிரம் பேரும், காரைக்காலில் 250 பேரும், ஏனாமில் 150 பேரும், மாஹேயில் 100 பேரும் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதுவையில் காசோலை பரிவா்த்தனைகள், மின்னணு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வங்கிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், சுமாா் ரூ. 100 கோடி அளவிலான வங்கி பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 16) வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com