கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி முன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பொதுத் துறை வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன் நடைபெற்ற போராட்டத்துக்கு வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். வட்டத் தலைவா் இராதாகிருஷ்ணன், பாபாஜி, இராமச்சந்திரன், பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.