புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,351 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,068-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் பி.கே.சாலை பகுதியைச் சோ்ந்த 57 வயது பெண் உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 673-ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,215-ஆக (97.87 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 91 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 89 பேரும் என மொத்தம் 180 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதுவையில் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 998 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 867 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்துள்ளன. இதுவரை 13,857 சுகாதாரப் பணியாளா்களுக்கும், 5,371 முன்களப் பணியாளா்களுக்கும், 10,931 பொதுமக்களுக்கும் என 30,159 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com