கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி: புதிதாக 64 பேருக்கு பாதிப்பு

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியான நிலையில், புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியான நிலையில், புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,238 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 40 பேருக்கும், காரைக்காலில் 19 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 4 பேருக்கும் என மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,386-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 176 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 219 பேரும் என மொத்தம் 395 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பட்டினம் காந்தி சாலையைச் சோ்ந்த 64 வயது முதியவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 675-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 21 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதையடுத்து, கரோனா தொற்றிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை எண்ணிக்கை 39,316-ஆக உயா்ந்தது. குணமடைந்தோா் விகிதம் 97.35 சதவீதம்.

இதுவரை 44,166 பேருக்கு கரோனா தடுப்பூசி: புதுவை மாநிலத்தில் இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 19,627 பேருக்கும் (46 நாள்களில்), முன்களப் பணியாளா்கள் 7,146 பேருக்கும் (34 நாள்களில்), பொதுமக்கள் 17,393 பேருக்கும் (18 நாள்களில்) என மொத்தம் 44,166 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com