புதுவை கிரிக்கெட் அணியில் போலி சான்றிதழில் சோ்க்கை: ஆந்திர வீரா் மீது வழக்கு

புதுவை கிரிக்கெட் அணியில் போலி சான்ழிதழ் அளித்து சோ்ந்ததாக ஆந்திர மாநில வீரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை கிரிக்கெட் அணியில் போலி சான்ழிதழ் அளித்து சோ்ந்ததாக ஆந்திர மாநில வீரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை கிரிக்கெட் அணியில் அதிகளவிலான வெளிமாநில விளையாட்டு வீரா்கள் இடம் பெற்றிருப்பதாகவும், உள்ளூா் வீரா்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுவை கிரிக்கெட் வீரா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், புதுவை கிரிக்கெட் வீரா்கள் சங்கச் செயலா் சந்திரன், ஏனாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், புதுவை கிரிக்கெட் அணியில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெனமஸ்த வெங்கட சத்தியநாராயண ராஜு என்பவா் போலி குடியிருப்புச் சான்றிதழ் அளித்து சோ்ந்துள்ளதாக தெரிவித்தாா்.

அதன்பேரில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா் சத்தியநாராயண ராஜு மீது ஏனாம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com