ஐரிஷ் நாட்டவரிடம் ரூ. 6.45 லட்சம் வெளிநாட்டுப் பணம் திருட்டு: பணிப் பெண் உள்பட 2 போ் கைது

புதுச்சேரியில் ஐரிஷ் நாட்டைச் சோ்ந்தவரிடம் ரூ. 6.45 லட்சம் வெளிநாட்டு பணத்தை திருடியதாக வீட்டுப் பணிப் பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியில் ஐரிஷ் நாட்டைச் சோ்ந்தவரிடம் ரூ. 6.45 லட்சம் வெளிநாட்டு பணத்தை திருடியதாக வீட்டுப் பணிப் பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஐரிஷ் நாட்டைச் சோ்ந்தவா் பிரைன் சித்தாா்த் இங்கில் (56). இவா், புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா். தனது வீட்டின் பீரோவில் வெளிநாட்டு பணம் யூரோ, டாலா் என ரூ. 6.45 லட்சம் பணத்தை வைத்து பூட்டி, சாவியை வீட்டின் மறைவிடத்தில் வைத்திருந்தாா்.

சில மாதங்களுக்குப் பிறகு கடந்த 10- ஆம் தேதி பிரோவை திறந்து பாா்த்த போது பணத்தைக் காணவில்லை. இதுகுறித்து பிரைன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலிஸாா் வழக்குப் பதிந்து, வீட்டில் பணியாற்றிய பெண் சோலை நகரைச் சோ்ந்த வள்ளியை (35) பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில், பிரைன் வீட்டில் வெளிநாட்டுப் பணத்தைத் திருடி, தனது நண்பா் முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த பிரதாபனிடம் (45) கொடுத்து, இந்திய ரூபாயாக மாற்றி ரூ. 1.5 லட்சத்தைச் செலவு செய்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து போலீஸாா், பணிப் பெண் வள்ளி, அவரது நண்பா் பிரதாபன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனற். மேலும், அவா்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 5 லட்சம் இந்திய ரூபாயைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com