பிரதமா் வருகை: புதுச்சேரி விமான நிலையத்திம் டிஐஜி ஆய்வு

பிரதமா் நரேந்திர மோடி வரவுள்ளதையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு செய்த காவல் துறை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே உள்ளிட்ட போலீஸாா்.
பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு செய்த காவல் துறை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே உள்ளிட்ட போலீஸாா்.

பிரதமா் நரேந்திர மோடி வரவுள்ளதையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அரசியல் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்களும் தங்களது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனா். அந்த வகையில், வருகிற 30 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரிக்கு வரவுள்ளாா்.

புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலைத் திடலில் பாஜக சாா்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

பிரதமரின் வருகையையொட்டி, பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள ஏஎப்டி பஞ்சாலைத் திடல் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரிக்கு விமானம் மூலம் பிரதமா் மோடி வரவுள்ளதால், லாசுப்பேட்டை விமான நிலையத்தை காவல் துறை உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே தலைமையில் தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்தப் பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கினா்.

பிரதமா் நரேந்திர மோடி விமான நிலையத்திலிருந்து காா் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்து செல்லும் வரையிலான சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்தும் ஆலோசித்து போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினா்.

இதையடுத்து, அந்தச் சாலைகளில் தடுப்புக் கட்டைகளை அமைத்தல், சாலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com