மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று: 57,829 பேருக்கு கரோனா தடுப்பூசி

புதுவையில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 57,829 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுவையில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 57,829 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 2,164 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 60 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மொத்தம் 96 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,836 -ஆக அதிகரித்தது. அதேநேரம், இதுவரை 39,402 போ் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினா்.

தற்போது ஜிப்மா் மருத்துவமனையில் 66 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 139 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீடுகளில் 498 போ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். மொத்தமாக 755 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 679 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 6,61,576 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,13,703 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

மாநிலத்தில் சுகாதாரத் துறைப் பணியாளா்கள் 23,377 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 9,793 பேருக்கும், பொதுமக்கள் 24,659 பேருக்கும் என மொத்தம் 57,829 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com