கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஆயிரத்தைத் தாண்டியது.

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஆயிரத்தைத் தாண்டியது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 2,427 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 61, காரைக்கால் - 51, ஏனாம் - 2, மாஹே - 1 என மொத்தம் 115 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41,341-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 57 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 682-ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, 94 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,648-ஆக (95.90 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 284 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 727 பேரும் என 1,011 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 25,213 போ், முன்களப் பணியாளா்கள் 10,711 போ், பொதுமக்கள் 28,927 போ் என மொத்தம் 64,851 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com