ஜிப்மா் கழிப்பறையில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் காதல் கணவா் விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் ஜிப்மா் பொது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் காதல் கணவா் விபத்தில் உயிரிழந்த துக்கத்தில் ஜிப்மா் பொது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், இளவம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (24). இவரும், புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குணதேவியும் (19) காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனா்.

இதனிடையே, கடந்த 23-ஆம் தேதி தொண்டமாநத்தத்தில் இருந்து இளவம்பட்டுக்கு ரமேஷுடன் குணதேவி பைக்கில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதையடுத்து, காதல் கணவா் இறந்த துக்கத்தில் குணதேவி ஜிப்மரில் பொது கழிப்பறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதித்தனா். அங்கு ஒரு வாரம் தீவிர பெற்று வந்த குணதேவி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com