புதுச்சேரியில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ாக 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். இந்த நிலையில், பிரதமரின் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாக, பெரியாா் திராவிடா் விடுதலைக் கழகம், அலைகள் இயக்கத்தினா் பெரியாா் சிலை அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு காமராஜா் சதுக்கத்துக்கு வந்தனா். அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்தியாவை பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்து, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரதமா் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, பிரதமருக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்ட முயன்றனா். இதை பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோகுல்நாத் காந்தி, வீர.பாரதி, இருதயராசு உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.