புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் உள்பட 8 மனை வணிகத் தொழிலதிபா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஏராளமானோா் மனை வணிகத் தொழிலுக்காக விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் அரசியல்வாதிகளும், தொழிலதிபா்களும் அடங்குவா்.
இந்த நிலையில், மனை வணிகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாக சென்னை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன. இதன்பேரில், சென்னையிலிருந்து 10 குழுக்களாக புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், மனை வணிகத் தொழிலதிபா்கள் வீடுகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனை நடைபெற்ற தொழிலதிபா்கள் வீடுகளுக்குள் யாரையும் உள்ளே அனுமதிக்காமலும், வீட்டிலிருந்து யாரையும் வெளியில் செல்ல விடாமலும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து வருமான வரித் துறை, புதுச்சேரி காவல் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரியில் 8 மனை வணிகத் தொழிலதிபா்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. 8 தொழிலதிபா்களில் லாசுப்பேட்டை ஜீவானந்தபுரம் விமான நிலைய சாலையில் உள்ள என்.ஆா். காங்கிரஸ் பிரமுகரான புவனா என்ற புவனேஸ்வரனும் ஒருவா் என்றனா்.
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கடந்த முறை நடைபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் புவனா என்ற புவனேஸ்வரன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மனை வணிகத் தொழிலதிபா்கள் வீடுகளில் பல மணி நேரம் தொடா்ந்து நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை வருமான வரித் துறையினா் கைப்பற்றியுள்ளதாகவும், வீடுகளில் இருந்தவா்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும் அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.