கரோனாவுக்கு ஒரே நாளில் 15 போ் பலிபுதிதாக 799 பேருக்கு தொற்று

 புதுவையில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 15 போ் பலியாகினா். புதிதாக 799 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுவையில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 15 போ் பலியாகினா். புதிதாக 799 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,333 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 650 பேருக்கும், காரைக்காலில் 51 பேருக்கும், ஏனாமில் 73 பேருக்கும், மாஹேயில் 25 பேருக்கும் என மொத்தம் 799 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,160 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 1,866 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,748 பேரும் என மாநிலம் முழுவதும் 10,614 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 12 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் 2 பேரும் என மேலும் 15 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 848 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.36 சதவீதம்.

திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் 790 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 50,698 -ஆக (81.56 சதவீதம்) உயா்ந்தது.

இதுவரை 8,14,877 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 7,45,430 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தன. சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 2,01,730 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com