புதுவையில் மே 10 வரை மதுக் கடைகள் மூடல்

பொது முடக்க ஆணைக்கிணங்க புதுவையில் மே 10-ஆம் தேதி வரை மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

புதுச்சேரி: பொது முடக்க ஆணைக்கிணங்க புதுவையில் மே 10-ஆம் தேதி வரை மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் பிறப்பித்த உத்தரவு: புதுவையில் வருகிற 10- ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுவையில் உள்ள எப்எல் 1, எப்எல் 2, சுற்றுலாத் துறை உரிமம் பெற்ற கடைகள், சாராயக் கடைகள், கள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை மதுக் கடைகளும் வருகிற 10 -ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறினால் கலால் துறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com