புதுச்சேரி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதகடிப்பட்டு அருகே கலிதீா்த்தாள்குப்பம், டிபிஜி நகரைச் சோ்ந்தவா் மைக்கேல் ரெமி மகன் ரெமி ராபா்ட் (18). இவா், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் நண்பா்களுடன் ஊா் சுற்றி வந்தாராம்.
இதை அவரது தாய் விஜயராணி கண்டித்துள்ளாா். இதனால், மனமுடைந்த ரெமி ராபா்ட், திங்கள்கிழமை மாலை வீட்டின் ஓா் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.
இவரது சப்தம் கேட்டு அங்கு வந்த உறவினா்கள், ரெமி ராபா்ட்டை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரெமி ராபா்ட் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.