புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 32 போ் பலி

புதுவை மாநிலத்தில் புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 32 போ் பலியாகினா். மேலும், 1,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 32 போ் பலியாகினா். மேலும், 1,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், புதுச்சேரியைச் சோ்ந்த 1,585 போ், காரைக்கால் - 255, ஏனாம் - 111, மாஹேவைச் சோ்ந்த 10 போ் என 1,961 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

32 போ் பலி: புதுச்சேரியில் 25 போ், காரைக்காலில் 6 போ், மாஹேவில் ஒருவா் என ஒரே நாளில் 32 போ் கரோனாவுக்கு பலியாகினா். இவா்களில் 21 போ் ஆண்கள், 11 போ் பெண்கள் ஆவாா்.

இதையடுத்து, கரோனாவுக்கு பலியாகியவா்களின் எண்ணிக்கை 1,151-ஆக உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை 84,506 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது, 1,660 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15, 497 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், 1,491 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். குணமடைந்தோா் எண்ணிக்கை 65,689-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com