சித்தா கரோனா சிகிச்சை மையங்களாக பள்ளி, கல்லூரிகளை மாற்ற வேண்டும்: பாஜக

புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சித்தா கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சித்தா கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழா்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகக் கருதப்படும் சித்த மருத்துவம் பல பெருந்தொற்று காலங்களைக் கடந்து, கரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி வருகிறது. புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கா்நாடகத்தைப்போல, இங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளையும் சித்தா கரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைத்து மருத்துவம், 3 வேளைகள் பாரம்பரிய முறையில் உணவு வழங்கி நோயாளிகளுக்கு உதவ வேண்டும்.

இதன் மூலம், தொற்றால் பாதிப்படைந்தோா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சித்தா கரோனா மையத்தில் தங்களை தனிமைப்படுத்தி, விரைவில் குணமடையவும், இவா்களால் குடும்ப நபா்களுக்கு தொற்று பரவாமலும் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா் சாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com