புதுவையில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா: 27 போ் உயிரிழப்பு

புதுவையில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 27 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் ஒரே நாளில் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 27 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,032 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,030 பேருக்கும், காரைக்கால் - 220, ஏனாம் - 53, மாஹேவில் 18 பேருக்கும் என மொத்தம் 1,321 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

27 போ் உயிரிழப்பு: இந்த நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தவா்களில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 போ், ஜிப்மரில் 3 போ், புதுவை அரசு பொது மருத்துவமனையில் 2 போ், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 5 போ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 3 போ், ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் 2 போ், மாஹே தளச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் ஒருவா் என மொத்தம் 27 போ் உயிரிழந்தனா். இவா்களில் 16 போ் ஆண்கள், 11 போ் பெண்கள். இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,435 ஆகவும், இறப்பு விகிதம் 1.44 சதவீதமாகவும் உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை 99 ஆயிரத்து 540 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது, ஜிப்மரில் 516 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400 பேரும், கரோனா பராமரிப்பு மையத்தில் 595 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வீடுகளில் 12,991 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் மொத்தம் 14,842 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 83,263-ஆக (83.65 சதவீதம்) உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com