புதுச்சேரியிலுள்ள கரோனா தொற்றாளா்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கான செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை செயலா் தி.அருண் கூறியதாவது:
இந்தப் பெருந்தொற்று காலத்தில் மனநலனை பேணுவதற்காகவும், அதற்காக உதவிகளை எளிய முறையில் பெறவும், தேசிய மனநல திட்டத்தின் கீழ் புதுச்சேரி மனநலத் துறையின் நிபுணா் குழு கலந்தாலோசித்தனா்.
அதன்படி, ஒற்றை இலவச தொலைபேசி எண் அமைக்கவும், கரோனா நோயாளிகளுக்கு செல்லிடப்பேசி மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யபட்டது.
தற்சமயம் மனநல ஆலோசனைகளுக்கு 9894144204, 7639427670, 9894048320, 9944627463, 7904396602, 9994191223, 9894781267, 9443658085, 8681944528, 9965188023, 8220540694, 9655588693, 8870290200, 9003816203, 9361641386, 8300427017, 9840943058, 9600317149, 9894998570, 9244533515, 9944185760, 9488172392, 9345401331, 9944411462, 9442708102, 9514791979, 9952535499, 9751420510, 9443283252, 9789593886, 9487670972, 8940736544, 9171765345, 9789424575, 9787381306, 9894995347, 9447359622, 9092128810 ஆகிய எண்களுக்கு, காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை, பொதுமக்கள் அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்றாா் அவா்.